ஜகன்மோஹன வேணுகோபாலன் !


கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து,
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவில் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதின போது,
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;
மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்;
இரங்கும்; கூம்பும்; திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே!
(பெரியாழ்வார்)

No comments: