
அமலனாதிபிரான் - 3
மந்தி பாய் வடவேங்கட மாமலை*
வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து
அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல்
அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !
[விளக்கம்]
ஸ்ரீரங்கத்திற்கு வடக்கு திசையில் உள்ள வேங்கட மலையில் நின்று அருள் புரியும் வேங்கடநாதனே அரங்க நகருள் ஆதிசேஷன் என்னும் படுக்கை மீது அரங்கனாக கிடக்கிறான். இந்த அரங்கன்(வேங்கடநாதன்) வானில் வாழ்பவரும் வந்து வணங்கும் பெருமை மிக்கவன். முன்பு இவனுடைய அழகிய வயிற்றில் இருந்து 'படைக்கும் கடவுளான பிரமன்' படைக்கப் பெற்றான். இன்று அந்த எழில் வயிற்றில், செவ்வானம் போன்ற நிறத்து ஆடையை அணிந்து கொண்டு, என் இன்னுயிர் அரங்கன் திகழும் அழகே அழகு !! இந்த அழகில் என் உள்ளம் கொள்ளை போகிறதே !! (இந்த அழகிற்கே நான் அடிமையானேன்.)
(சொற்பொருள்)
அயன் - பிரம்மா
மந்தி - குரங்கு
சந்தி - வணக்கம்
அந்தி - செவ்வானம்
உந்தி - வயிறு
அரவு - நாகம் (ஆதிசேஷன்)
[கூடுதல் விளக்கம்]
(மந்தி பாய் வடவேங்கட மாமலை) - குரங்குகள் பாய்ந்து விளையாடும் பெருமை மிக்க திருவேங்கட மலை.
மந்தி பாய் வடவேங்கட மாமலை*
வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து
அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல்
அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !
[விளக்கம்]
ஸ்ரீரங்கத்திற்கு வடக்கு திசையில் உள்ள வேங்கட மலையில் நின்று அருள் புரியும் வேங்கடநாதனே அரங்க நகருள் ஆதிசேஷன் என்னும் படுக்கை மீது அரங்கனாக கிடக்கிறான். இந்த அரங்கன்(வேங்கடநாதன்) வானில் வாழ்பவரும் வந்து வணங்கும் பெருமை மிக்கவன். முன்பு இவனுடைய அழகிய வயிற்றில் இருந்து 'படைக்கும் கடவுளான பிரமன்' படைக்கப் பெற்றான். இன்று அந்த எழில் வயிற்றில், செவ்வானம் போன்ற நிறத்து ஆடையை அணிந்து கொண்டு, என் இன்னுயிர் அரங்கன் திகழும் அழகே அழகு !! இந்த அழகில் என் உள்ளம் கொள்ளை போகிறதே !! (இந்த அழகிற்கே நான் அடிமையானேன்.)
(சொற்பொருள்)
அயன் - பிரம்மா
மந்தி - குரங்கு
சந்தி - வணக்கம்
அந்தி - செவ்வானம்
உந்தி - வயிறு
அரவு - நாகம் (ஆதிசேஷன்)
[கூடுதல் விளக்கம்]
(மந்தி பாய் வடவேங்கட மாமலை) - குரங்குகள் பாய்ந்து விளையாடும் பெருமை மிக்க திருவேங்கட மலை.
